வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'விருஷபா'. மலையாளம் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிப் படமாக உருவாகியுள்ள விருஷபா வரும் டிசம்பர் 25ம் தேதி பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கன்னட இயக்குனர் கவுரி நந்தா இயக்கியுள்ளார். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த படத்தை இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நடிகர் மோகன்லால் பேசும்போது, “கன்னட டைரக்டர் ஒருவர் மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை இயக்குவதும் அதை வடநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதும் என இதன் வித்தியாசமான கூட்டணியே இந்தப் படத்தின் சிறப்பம்சமாக என்னை கவர்ந்தது. அது மட்டுமல்ல இந்த படத்தின் கதையை கவுரி நந்தா என்னிடம் சொன்னபோது நிச்சயமாக இது வித்தியாசமான படமாக இருக்கப் போகிறது எனக்கு தெரிந்தது. இரண்டு வித காலகட்டங்களில் இந்த படம் நடக்கும் விதமாக உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.




