பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'விருஷபா'. மலையாளம் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிப் படமாக உருவாகியுள்ள விருஷபா வரும் டிசம்பர் 25ம் தேதி பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கன்னட இயக்குனர் கவுரி நந்தா இயக்கியுள்ளார். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த படத்தை இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நடிகர் மோகன்லால் பேசும்போது, “கன்னட டைரக்டர் ஒருவர் மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை இயக்குவதும் அதை வடநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதும் என இதன் வித்தியாசமான கூட்டணியே இந்தப் படத்தின் சிறப்பம்சமாக என்னை கவர்ந்தது. அது மட்டுமல்ல இந்த படத்தின் கதையை கவுரி நந்தா என்னிடம் சொன்னபோது நிச்சயமாக இது வித்தியாசமான படமாக இருக்கப் போகிறது எனக்கு தெரிந்தது. இரண்டு வித காலகட்டங்களில் இந்த படம் நடக்கும் விதமாக உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.