உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் |

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராஜமவுலி படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக பணியாற்றி வரும் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கான கதை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மகேஷ் பாபு படம் பற்றி அவர் கூறும்போது, நிஜத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி அட்வென்சர் பாணியிலான திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப்படம் ஒரு பாகத்துடன் முடியாமல் இதற்கு அடுத்தடுத்த பாகங்களும் இருக்கும் விதமாக இதன் மைய கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறாராம் விஜயந்திர பிரசாத். அதேசமயம் இதன் அடுத்த பாகங்களில் இதே கதை தொடரும் என்று சொல்ல முடியாது.. கதை வேறாக இருக்கும்.. ஆனால் இதில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்வார்கள் என்றும் ஒரு புதிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் விஜயேந்திர பிரசாத்.