ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்திருந்த வாத்தி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். மாணவர்கள் ஆசிரியர் பின்புலத்தில் உருவாகியிருந்த இந்த படம் தமிழில் டீசன்டான வெற்றியும், தெலுங்கில் ஓரளவு நல்ல வசூலையும் பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி குறித்தும் படம் குறித்தும் இயக்குனர் வெங்கி அட்லூரி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
வாத்தி படத்தை முடித்துவிட்டு மீண்டும் தெலுங்கில் நுழைவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதேபோல சீதாராமம் படத்திற்கு பிறகு தெலுங்கில் ஒரு நல்ல படத்தில் நடிப்பதற்காக துல்கர் சல்மானும் எதிர்பார்த்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தான் என்னுடைய படத்தில் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. துல்கர் சல்மானை பொறுத்தவரை அவர் தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் ஹிந்தியிலும் ஏற்கனவே பிரபலமானவர். அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதையும் வட இந்தியாவுடன் தொடர்புடையது என்பதால் இதை ஒரு பான் இந்தியா படம் என்று கூட சொல்லலாம்” என்று கூறியுள்ளார் வெங்கி அட்லூரி.