டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான புலி முருகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வழக்கமான படங்களில் இருந்து மாறி, புலிக்கும் மனிதனுக்கும் உண்டான பகை என்பதை மையப்படுத்தி ஒரு பேண்டஸி படமாக இந்த படம் உருவாகி இருந்ததால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதன்பிறகு மோகன்லாலிடமிருந்து அப்படி ஒரு படம் எப்போது வரும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதேபோன்ற கௌபாய் கதையம்சம் கொண்ட மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சில படங்களின் மூலமாகவே குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கோல்டன் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய் சல்மரில் துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, மம்முட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் அந்த படம் நாளை (ஜன-19) வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.