Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விவாகரத்து செய்தி வரும்போது கணவருடன் சேர்ந்து குலோப் ஜாமுன் சாப்பிட்ட நடிகை

05 ஜன, 2023 - 15:41 IST
எழுத்தின் அளவு:
Actress-eat-gulab-jamun-with-her-husband-when-she-got-divorce

மலையாள திரையுலகில் மிகக்குறைந்த வயதிலேயே எந்தவித சங்கோஜமும் இல்லாமல் விதவிதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் குணச்சித்திர நடிகை லேனா. தமிழில் அநேகன் படத்தில் நடித்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கூட பரபரப்பை ஏற்படுத்திய திரௌபதி படத்தில் டாக்டராக நடித்திருந்தார். தற்போதும் பிசியான குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் லேனா.

கடந்த 2004-ஆம் வருடம் அபிலாஷ் குமார் என்கிற கதாசிரியரை திருமணம் செய்த லேனா 2013ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்து கூறும்போது சினிமாவில் கூட இப்படி ஒரு விவாகரத்து நிகழ்வு நடந்து இருக்காது என்று அதன் சுவாரஸ்யம் குறித்து குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடன் சிறுவயதில் 6ம் வகுப்பிலிருந்து படித்த பள்ளி மாணவன் ஒருவரை விரும்பினேன். பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டேன். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழலாம் என பரஸ்பரம் முடிவு செய்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தோம். எங்களது விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் நாளன்று நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் நீதிமன்றம் சென்றோம். அப்போது எங்களுடைய வழக்கறிஞர் இன்னொரு வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் அதுவரை நீங்கள் கேன்டீனில் காத்திருங்கள் என்றும் கூறினார்.

அதன்பிறகு எங்களது விவாகரத்து கிடைத்து விட்ட தகவலுடன் அவர் எங்களை தேடி கேன்டீன் வந்தபோது நாங்கள் இருவரும் ஒன்றாக குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றுவிட்டார். இதுபோன்ற ஒரு வழக்கை, இது போன்ற ஒரு தம்பதியினரை அவர் எப்போதும் சந்தித்து இருக்க மாட்டார். சினிமாவில் கூட இப்படி ஒரு விவாகரத்து வழக்கு காட்டப்பட்டிருக்காத்து. பிரிவோம் என முடிவு எடுத்துவிட்ட பின் டீசண்டாக நட்புடன் பிரிவதுதான் நல்லது” என்று கூறியுள்ளார் நடிகை லேனா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
90 சதவீத தோல்வி படங்கள் ; அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்90 சதவீத தோல்வி படங்கள் ; ... ஜனவரி 19ல் ரிலீஸ் ஆகும் நண்பகல் நேரத்து மயக்கம் ஜனவரி 19ல் ரிலீஸ் ஆகும் நண்பகல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
07 ஜன, 2023 - 20:28 Report Abuse
Natchimuthu Chithiraisamy குடும்பம் வேண்டாம் என்பது அனைவரின் எண்ணம். மனிதனால் விலங்கினத்தை அவனுக்கு தேவை எது என்பதை தேர்வு செய்து ஆண் நாய்களை வளர்த்து நாய் குடும்பத்தை அழித்தான். பெண் மாடுகளை வளர்த்து மாட்டு குடும்பத்தை அளித்தான். சினிமா செய்திகளினால் மனித குடும்பத்தை அழிக்கிறான். வசதியானவன் பல குடும்பங்கள் கொண்டுள்ளான் ஏழை ஒரு குடும்பமும் இல்லாமல் போய்விடு,ம் போல் தெரிகிறது.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09 ஜன, 2023 - 15:22Report Abuse
NicoleThomsonநிஜம் தான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in