நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மலையாள திரையுலகில் மிகக்குறைந்த வயதிலேயே எந்தவித சங்கோஜமும் இல்லாமல் விதவிதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் குணச்சித்திர நடிகை லேனா. தமிழில் அநேகன் படத்தில் நடித்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கூட பரபரப்பை ஏற்படுத்திய திரௌபதி படத்தில் டாக்டராக நடித்திருந்தார். தற்போதும் பிசியான குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் லேனா.
கடந்த 2004-ஆம் வருடம் அபிலாஷ் குமார் என்கிற கதாசிரியரை திருமணம் செய்த லேனா 2013ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்து கூறும்போது சினிமாவில் கூட இப்படி ஒரு விவாகரத்து நிகழ்வு நடந்து இருக்காது என்று அதன் சுவாரஸ்யம் குறித்து குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடன் சிறுவயதில் 6ம் வகுப்பிலிருந்து படித்த பள்ளி மாணவன் ஒருவரை விரும்பினேன். பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டேன். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழலாம் என பரஸ்பரம் முடிவு செய்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தோம். எங்களது விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் நாளன்று நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் நீதிமன்றம் சென்றோம். அப்போது எங்களுடைய வழக்கறிஞர் இன்னொரு வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் அதுவரை நீங்கள் கேன்டீனில் காத்திருங்கள் என்றும் கூறினார்.
அதன்பிறகு எங்களது விவாகரத்து கிடைத்து விட்ட தகவலுடன் அவர் எங்களை தேடி கேன்டீன் வந்தபோது நாங்கள் இருவரும் ஒன்றாக குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றுவிட்டார். இதுபோன்ற ஒரு வழக்கை, இது போன்ற ஒரு தம்பதியினரை அவர் எப்போதும் சந்தித்து இருக்க மாட்டார். சினிமாவில் கூட இப்படி ஒரு விவாகரத்து வழக்கு காட்டப்பட்டிருக்காத்து. பிரிவோம் என முடிவு எடுத்துவிட்ட பின் டீசண்டாக நட்புடன் பிரிவதுதான் நல்லது” என்று கூறியுள்ளார் நடிகை லேனா.