தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த ஷபீக்கிண்டே சந்தோஷம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை உன்னி முகுந்தனே தயாரித்து இருந்தார். இந்த படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் தமிழ் நடிகருமான பாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் உன்னி முகுந்தன் தனக்கு பேசியபடி சம்பளத்தொகை கொடுக்கவில்லை என்றும், தனக்கு மட்டும் அல்ல இன்னும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும் பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டினார் பாலா. மேலும் பெண் கலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் செட்டில் செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பேட்டி மலையாள திரையுலகில் பரபரப்பை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த உன்னி முகுந்தன் படத்தில் பணியாற்றியவர்களுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்கப்பட்டதை வங்கிக் கணக்கு ஆதாரங்களுடன் விளக்கினார். மேலும் நடிகர் பாலாவிற்கு இந்த படத்தில் நடிக்க நாளொன்றுக்கு 10 ஆயிரம் வீதம் 20 நாட்களுக்கு இரண்டு லட்சம் சம்பளம் பேசப்பட்டு முழுவதும் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கூறிய உன்னி முகுந்தன், பாலா கூறியது போல சம்பளம் வழங்குவதில் யாருக்கும் எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் இயக்குனர் அனூப் பந்தளம் தனக்கு சம்பளம் முழுவதும் செட்டில் செய்யப்பட்டு விட்டதாக கூறிய நிலையில், தற்போது படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரகுமானும் இந்த விவகாரம் குறித்து கூறும்போது தனக்குரிய சம்பளமும் ஜிஎஸ்டி தொகை உட்பட ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் சம்பளம் முழுமையாக வந்துவிட்டதா என உன்னி முகுந்தன் தானே போன் செய்து விசாரித்தார் என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் நடிகர் பாலா உன்னி முகுந்தன் மீது வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கும் விதமாக பேட்டி கொடுத்து வருவதாக ஒரு சலசலப்பு தற்போது எழுந்துள்ளது.




