300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
நாடக நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் கொச்சின் அம்மினி. 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். அதோடு பாடகியாகவும், பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். பூர்ணிமா பாக்யராஜ் நடித்த மலையாள படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர். குறிப்பாக மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் இவரின் பின்னணி குரல் அப்போது வெகுவாக ரசிக்கப்பட்டது.
பிற மொழி நடிகைகள் நடிக்கும் மலையாள படங்களுக்கு இவர் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக சாரதா, கே.ஆர்.விஜயா, விஜயநிர்மா ஆகியோருக்கு ஆஸ்தான பின்னணி குரல் கலைஞராக இருந்தார். 80 வயதான அம்மனி முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.