தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

நாடக நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் கொச்சின் அம்மினி. 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். அதோடு பாடகியாகவும், பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். பூர்ணிமா பாக்யராஜ் நடித்த மலையாள படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர். குறிப்பாக மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் இவரின் பின்னணி குரல் அப்போது வெகுவாக ரசிக்கப்பட்டது.
பிற மொழி நடிகைகள் நடிக்கும் மலையாள படங்களுக்கு இவர் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக சாரதா, கே.ஆர்.விஜயா, விஜயநிர்மா ஆகியோருக்கு ஆஸ்தான பின்னணி குரல் கலைஞராக இருந்தார். 80 வயதான அம்மனி முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.