புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை கமல் தொகுத்து வழங்குகிறார். இதேபோன்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அங்கு 6வது சீசனாக பிக்பாஸ் தமிழுக்கு முன்பே துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கிறது. இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நாகார்ஜுனா, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.