தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள காந்தாரா படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 200 கோடியை தாண்டி வசூலையும் வாரிகுவித்து வருகிறது. நடிகர் ரஜினி படத்தை பார்த்துவிட்டு இந்தியாவின் மாஸ்டர் பீஸ் என்று புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் ஏற்பாட்டின் பேரில் 'காந்தாரா' திரையிடப்பட்டது. இது தொடர்பாக ஈஷா வெளியிட்ட பதிவில் "கந்தாரா திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் நிறுவனத்திற்கு நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா ஈஷாவில் திரையிடப்படும் இரண்டாவது படம். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு கங்கனா நடித்திருந்த மணிகர்னிகா படம் திரையிடப்பட்டது. இந்த படம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் வாழ்க்கை கதை.