இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மலையாள சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தமிழ் நாட்டில் மீரா மிதுன், ஆந்திராவில் ஸ்ரீரெட்டி போன்று மலையாளத்தில் பரபரப்புக்கு பெயர் பெற்றவர் இவர்.
4 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்று பின்பு விடுதலை ஆனார். மது போதைக்கு அடிமையான அஸ்வதி பாபு பலமுறை போதை பொருளுடன் போலீசிடம் சிக்கி உள்ளார். இது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அஸ்வதி தனது புதிய காதலன் நவுவலுடன் கொச்சி நகருக்குள் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதை கண்ட பொதுமக்கள் காரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது கார் டயர் வெடித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அஸ்வதியும், காதலன் நவுபலும் இறங்கி ஓடி தலைமறைவானார்கள். விரைந்து வந்த போலீசார் மறைந்திருந்த இருவரையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் இருவரும் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரையும் கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.