தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தமிழ் நாட்டில் மீரா மிதுன், ஆந்திராவில் ஸ்ரீரெட்டி போன்று மலையாளத்தில் பரபரப்புக்கு பெயர் பெற்றவர் இவர்.
4 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்று பின்பு விடுதலை ஆனார். மது போதைக்கு அடிமையான அஸ்வதி பாபு பலமுறை போதை பொருளுடன் போலீசிடம் சிக்கி உள்ளார். இது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அஸ்வதி தனது புதிய காதலன் நவுவலுடன் கொச்சி நகருக்குள் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதை கண்ட பொதுமக்கள் காரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது கார் டயர் வெடித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அஸ்வதியும், காதலன் நவுபலும் இறங்கி ஓடி தலைமறைவானார்கள். விரைந்து வந்த போலீசார் மறைந்திருந்த இருவரையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் இருவரும் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரையும் கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.