'லியோ' வியாபாரத்தை பரப்புவது விஜய்யா, தயாரிப்பாளரா ? | ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம் | இரண்டாம் பாகத்தில் மீண்டும் 'பையா' கூட்டணி ? | ‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! |
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ், பிஜூமேனன் இணைந்து நடித்த அய்யப்பனும் கோஷியும் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிக்க பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தை ஹிந்தியில் வெளியிடக் கூடாது என தடை கேட்டு டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்.
காரணம் தெலுங்கில் இந்த படத்தில் ரீமேக் ரைட்ஸ் விற்பதற்கு முன்பாகவே இதை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை முதல் ஆளாக வாங்கியவர் தான் ஜான் ஆபிரகாம். தனது சில படங்களை முடித்துவிட்டு இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது பீம்லா நாயக் ஹிந்தியில் வெளியானால் அவரால் நேரடியாக அய்யப்பனும் கோஷியும் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான் ஆப்ரஹாம்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பீம்லா நாயக் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.. இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் ஆபிரகாம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.