விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் கே.என்.சசிதரன். 72 வயதான சசிதரன் சினிமாவில் இருந்து விலகி கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சசிதரனுக்கு வீனா என்ற மனைவியும் ரித்து என்ற மகளும் முகில் என்ற மகனும் உள்ளனர்.
சசிதரன் புனே திரைப்பட கல்லூரியில் சினிமா கற்று, 1984ம் ஆண்டு அக்கரே என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் மம்முட்டி மோகன்லால் இணைந்து நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு பல படங்களை இயக்கியவர் கடைசியாக 'நாயனா' என்ற படத்தை இயக்கி இருந்தார். 2014ம் ஆண்டு வெளியான இதில் மியா ஜார்ஜ், அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்தனர்.