ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சம்பள உயர்வு திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சினிமாக்கள் நல்ல வசூலை குவித்து வருவதால் தொழிலாளர் சங்கம் சம்பள உயர்வு கேட்டு வந்தது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பாராமுகமாக இருந்தது.
இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 21ம் தேதி முதல் ஆந்திரா, தெலங்கானாவில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அங்கு நடந்து வந்த தமிழ் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர், திரைப்பட தொழிலாளர் சங்கத்தினரை அழைத்து தெலுங்கானா அமைச்சர் சீனிவாஸ் யாதவ், பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று முதல் தொழிலாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.