ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் |
நடிகை சாய்பல்லவி தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களையும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்துள்ளார் சாய்பல்லவி. ஆனால் அப்படி செல்லும்போது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்தபடி தனது தலையில் ஒரு துணியை போட்டு முகத்தை மறைத்தபடி தியேட்டருக்குள் சென்ற சாய்பல்லவி திரும்பி வரும்போதும் முகத்தை மறைத்தபடியே ரசிகர்களின் கண்ணில் சிக்காமல் வெளியே வருகிறார். அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்துள்ள விராட பருவம் மற்றும் தமிழில் நடித்துள்ள கார்கி ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் சாய்பல்லவி.