‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டால் அரசாங்க வேலையை கூட உதறிவிட்டு ஓடிவரும் ஆட்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சில படங்களில் நடித்து வந்த நடிகர் ஒருவர் தற்போது அரசு வேலை கிடைத்து இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அரசாங்க வேலை என்றாலும் அவருக்கு கிடைத்துள்ளது துப்புரவு பணியாளர் பணி என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே..
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆபரேஷன் ஜாவா என்கிற படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் உன்னி ராஜன். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு துப்புரவு பணியாளருக்கான அரசாங்க வேலை கிடைத்துள்ளது.
இந்த வேலையின் தன்மை குறித்து தெரிந்தேதான் இதில் நான் சேர்ந்துள்ளேன்.. நேர்முகத் தேர்வில் கூட இதே பதிலைத்தான் அதிகாரிகளிடம் கூறினேன் என்று கூறியுள்ளார் உன்னி ராஜன்.. மாதந்தோறும் நிரந்தர வருமானம் வேண்டும் என்பதற்காகவே அவர் சினிமாவை விட்டு விலகி இந்த வேலையில் சேர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.