பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டால் அரசாங்க வேலையை கூட உதறிவிட்டு ஓடிவரும் ஆட்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சில படங்களில் நடித்து வந்த நடிகர் ஒருவர் தற்போது அரசு வேலை கிடைத்து இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அரசாங்க வேலை என்றாலும் அவருக்கு கிடைத்துள்ளது துப்புரவு பணியாளர் பணி என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே..
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆபரேஷன் ஜாவா என்கிற படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் உன்னி ராஜன். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு துப்புரவு பணியாளருக்கான அரசாங்க வேலை கிடைத்துள்ளது.
இந்த வேலையின் தன்மை குறித்து தெரிந்தேதான் இதில் நான் சேர்ந்துள்ளேன்.. நேர்முகத் தேர்வில் கூட இதே பதிலைத்தான் அதிகாரிகளிடம் கூறினேன் என்று கூறியுள்ளார் உன்னி ராஜன்.. மாதந்தோறும் நிரந்தர வருமானம் வேண்டும் என்பதற்காகவே அவர் சினிமாவை விட்டு விலகி இந்த வேலையில் சேர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.