ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டால் அரசாங்க வேலையை கூட உதறிவிட்டு ஓடிவரும் ஆட்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சில படங்களில் நடித்து வந்த நடிகர் ஒருவர் தற்போது அரசு வேலை கிடைத்து இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அரசாங்க வேலை என்றாலும் அவருக்கு கிடைத்துள்ளது துப்புரவு பணியாளர் பணி என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே..
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆபரேஷன் ஜாவா என்கிற படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் உன்னி ராஜன். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு துப்புரவு பணியாளருக்கான அரசாங்க வேலை கிடைத்துள்ளது.
இந்த வேலையின் தன்மை குறித்து தெரிந்தேதான் இதில் நான் சேர்ந்துள்ளேன்.. நேர்முகத் தேர்வில் கூட இதே பதிலைத்தான் அதிகாரிகளிடம் கூறினேன் என்று கூறியுள்ளார் உன்னி ராஜன்.. மாதந்தோறும் நிரந்தர வருமானம் வேண்டும் என்பதற்காகவே அவர் சினிமாவை விட்டு விலகி இந்த வேலையில் சேர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.




