இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் தற்போது தெலுங்கு திரையுலகத்திற்கு சொந்தக்காரராக மாறி முன்னணி இசையமைப்பாளராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். ஒவ்வொரு படத்திலும் குறைந்தபட்சம் ஒரு சூப்பர்ஹிட் பாடலையாவது கொடுத்து ரசிகர்களின் இசையமைப்பாளராக வலம்வரும் தமன், இன்னொரு பக்கம் சின்னத்திரையில் தெலுங்கு இந்தியன் ஐடல் என்கிற பாடல் போட்டிக்கான ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் ஆகவும் பங்கு பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த போட்டியில் கலந்துகொண்ட ரேணுகுமார் என்பவர் தனது அற்புதமான குரல் வளத்தால் தமன், இன்னொரு ஜட்ஜான நடிகை நித்யா மேனன் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் வசீகரித்தார். மேலும் அவர் மேடையில் பேசும்போது கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக வருமானம் இல்லாமல் போய்விட்டது என்றும் தனது மகனின் படிப்பு செலவுக்கு கூட சிரமப்படுவதாகவும் கண்கலங்க தெரிவித்தார்.
இதைக்கேட்டதும் உடனே மகனின் படிப்பு பற்றி கவலைப்பட வேண்டாம் இனி வருகின்ற அவரது 3 வருடத்திற்கான படிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று மேடையிலேயே உறுதி கொடுத்து ரேணுகுமாரை மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தார் இசையமைப்பாளர் தமன்.