யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்த 'பட' என்கிற படம் வெளியானது. கே.எம்.கமல் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் ஆதிவாசிகள் மற்றும் தலித் நடத்திய போராட்ட களத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்
இதுபற்றி அவர் கூறும்போது, 'இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை தியேட்டரில் தான் பார்க்கவேண்டும். உண்மை சம்பவங்களின் பின்னணியில் பவர்ஃபுல்லான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை மலையாள சினிமாவின் திருப்பங்கள் கொண்ட ,'டாக் டே ஆப்டர்நூன்' படம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இந்த டாக் டே ஆப்டர்நூன் படம் ஹாலிவுட் இயக்குனர் சிட்னி லூமெட் என்பவர் இயக்கி ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.