'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கன்னடத்தில் உருவாகி இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப் சாப்டர் ஒன். யாஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது, இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா தாக்கம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் நாயகன் யாஷ் அழைப்பை ஏற்று, பெங்களூருக்கு சென்ற நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல கையோடு இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையையும் கைப்பற்றி வந்துள்ளார் பிரித்விராஜ்.