நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கன்னடத்தில் உருவாகி இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப் சாப்டர் ஒன். யாஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது, இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா தாக்கம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் நாயகன் யாஷ் அழைப்பை ஏற்று, பெங்களூருக்கு சென்ற நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல கையோடு இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையையும் கைப்பற்றி வந்துள்ளார் பிரித்விராஜ்.