மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கன்னடத்தில் உருவாகி இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப் சாப்டர் ஒன். யாஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது, இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா தாக்கம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் நாயகன் யாஷ் அழைப்பை ஏற்று, பெங்களூருக்கு சென்ற நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல கையோடு இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையையும் கைப்பற்றி வந்துள்ளார் பிரித்விராஜ்.