என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள், வருடத்திற்கு ஒருமுறை ஒன்றாக சந்தித்து தங்களது நினைவுகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இவர்களில் ஒருவர்கூட தங்களது கல்லூரி கால நண்பர்களை சந்தித்து அளவளாவியது போன்று இதுவரை செய்திகள் எதுவும் வெளியானதில்லை. ஆனால் தற்போது நடிகர் மம்முட்டி சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் தனது கல்லூரி கால நண்பர்களுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ., படித்த மம்முட்டி, அப்போது தன்னுடன் படித்த பலரையும் இந்த நிகழ்வில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து வெளியான புகைப்படங்களில், நண்பர்கள் கூட்டத்தில் மம்முட்டி ஒருவரே மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். 70 வயது ஆனாலும் என்றும் மார்க்கண்டேயன் என்கிற பட்டத்துக்கு மம்முட்டி தான் மிகச் சரியான நபர் என்றுதான் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது தோன்றுகிறது.