ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
மம்முட்டியின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்களில் அந்தப்படத்தின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் ஐந்தாம் பாகம் சிபிஐ 5 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது இந்த படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே மம்முட்டி புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிபிஐ 5 படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் பலரையும் அங்கிருந்த ஸ்டில் போட்டோகிராஃபரின் கேமராவை வாங்கி வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை இயக்குனர் மது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.