'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மம்முட்டியின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்களில் அந்தப்படத்தின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் ஐந்தாம் பாகம் சிபிஐ 5 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது இந்த படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே மம்முட்டி புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிபிஐ 5 படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் பலரையும் அங்கிருந்த ஸ்டில் போட்டோகிராஃபரின் கேமராவை வாங்கி வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை இயக்குனர் மது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.