அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ |

வரும் ஜன-7ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை மற்றும் தென்னிந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர் படக்குழுவினர்.. அப்படி செல்லும் இடங்களில் அந்தந்த திரையுலகில் உள்ள முக்கிய ஹீரோக்களை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனர். அந்தவகையில் பாலிவுட்டில் சல்மான்கான், கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தினர்.. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லவேண்டும்.
அந்தவகையில் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸை சிறப்பு விருந்தினராக அழைத்து மேடையேற்றியது ஆர்ஆர்ஆர் டீம்.. மேலும் சமீபத்தில் டொவினோ நடிப்பில் வெளியான மின்னல் முரளி படத்தையும் ராஜமவுலி உள்ளிட்ட அனைவரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.
இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படி மேலே போய், “மோகன்லால், மம்முட்டி, துல்கர், பஹத் பாசில் போன்ற நடிகர்களை போலவே நீங்களும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகர் தான். உங்களுடைய மின்னல் முரளிக்கு என் வாழ்த்துக்கள்.. நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம் பிரதர்” என்று டொவினோவை பாராட்டியுள்ளார். வளர்ந்துவரும் நிலையில் உள்ள டொவினோ தாமஸுக்கும் இந்தியாவே வியந்து பார்க்கும் ஆர்ஆர்ஆர் படக்குழுவின் இந்த பாராட்டுக்கள் மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்ல வேண்டும்.