அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

வரும் ஜன-7ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை மற்றும் தென்னிந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர் படக்குழுவினர்.. அப்படி செல்லும் இடங்களில் அந்தந்த திரையுலகில் உள்ள முக்கிய ஹீரோக்களை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனர். அந்தவகையில் பாலிவுட்டில் சல்மான்கான், கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தினர்.. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லவேண்டும்.
அந்தவகையில் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸை சிறப்பு விருந்தினராக அழைத்து மேடையேற்றியது ஆர்ஆர்ஆர் டீம்.. மேலும் சமீபத்தில் டொவினோ நடிப்பில் வெளியான மின்னல் முரளி படத்தையும் ராஜமவுலி உள்ளிட்ட அனைவரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.
இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படி மேலே போய், “மோகன்லால், மம்முட்டி, துல்கர், பஹத் பாசில் போன்ற நடிகர்களை போலவே நீங்களும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகர் தான். உங்களுடைய மின்னல் முரளிக்கு என் வாழ்த்துக்கள்.. நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம் பிரதர்” என்று டொவினோவை பாராட்டியுள்ளார். வளர்ந்துவரும் நிலையில் உள்ள டொவினோ தாமஸுக்கும் இந்தியாவே வியந்து பார்க்கும் ஆர்ஆர்ஆர் படக்குழுவின் இந்த பாராட்டுக்கள் மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்ல வேண்டும்.