அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் |
பிரபல மலையாள நடிகை ஸ்ருதி லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். தமிழில் பாரசீக மன்னன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையில் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார்.
கேரளாவில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மான்சன் மாவுங்கல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கும், ஸ்ருதி லட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதனால் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து ஸ்ருதி லட்சுமி நேற்று கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் ஸ்ருதி லட்சுமி அளித்த பேட்டியில் கூறியதாவது:
மான்சன் வீட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நடனமாடினேன். அதன் மூலம் அவர் எனக்கு அறிமுகமானார். எனக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்ததால், அவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் பிரச்னை இன்னும் அதிகமானது. அப்போதுதான் அவர் ஒரு போலியானவர் என்பதை அறிந்து கொண்டடேன்.
அவருடன் எனக்கு தொழில்முறை உறவு மட்டுமே உண்டு. அவரது குடும்பமும், எங்களது குடும்பமும் நட்பாக இருந்தது உண்மை. அப்போது எங்களுக்கு அவர் போலியான நபர், மோசடியான நபர் என்று தெரியாது. என்றார்.