தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

பிரபல மலையாள நடிகை ஸ்ருதி லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். தமிழில் பாரசீக மன்னன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையில் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார்.
கேரளாவில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மான்சன் மாவுங்கல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கும், ஸ்ருதி லட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதனால் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து ஸ்ருதி லட்சுமி நேற்று கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் ஸ்ருதி லட்சுமி அளித்த பேட்டியில் கூறியதாவது:
மான்சன் வீட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நடனமாடினேன். அதன் மூலம் அவர் எனக்கு அறிமுகமானார். எனக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்ததால், அவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் பிரச்னை இன்னும் அதிகமானது. அப்போதுதான் அவர் ஒரு போலியானவர் என்பதை அறிந்து கொண்டடேன்.
அவருடன் எனக்கு தொழில்முறை உறவு மட்டுமே உண்டு. அவரது குடும்பமும், எங்களது குடும்பமும் நட்பாக இருந்தது உண்மை. அப்போது எங்களுக்கு அவர் போலியான நபர், மோசடியான நபர் என்று தெரியாது. என்றார்.