அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

கொரோனா தாக்கம் நிலவியதால் கடந்த ஆண்டு முதல் கடந்த மாதம் வரை மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரின் படங்களும் ஓடிடி தளத்தில் தான் வெளியாகி வந்தன. மோகன்லால் நடித்த மரைக்கார் படம் மட்டும் சில பல இழுபறிகளுக்கு பின்னர் நேரடியாகவே தியேட்டர்களில் வெளியானது.. இனி இவர்கள் படங்கள் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது மோகன்லாலின் ப்ரோ டாடி படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லூசிபர் படத்தை தொடர்ந்து பிரத்விராஜ் டைரக்சனில் மோகன்லால் இரண்டாவது முறையாக நடித்துள்ள இந்த ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படம் ஜன-26ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
அதேசமயம் தனது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்-10 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ப்ரோ டாடி காமெடி படமாகவும் ஆராட்டு ஆக்சன் படமாகவும் உருவாகியுள்ளது.




