என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கொரோனா தாக்கம் நிலவியதால் கடந்த ஆண்டு முதல் கடந்த மாதம் வரை மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரின் படங்களும் ஓடிடி தளத்தில் தான் வெளியாகி வந்தன. மோகன்லால் நடித்த மரைக்கார் படம் மட்டும் சில பல இழுபறிகளுக்கு பின்னர் நேரடியாகவே தியேட்டர்களில் வெளியானது.. இனி இவர்கள் படங்கள் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது மோகன்லாலின் ப்ரோ டாடி படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லூசிபர் படத்தை தொடர்ந்து பிரத்விராஜ் டைரக்சனில் மோகன்லால் இரண்டாவது முறையாக நடித்துள்ள இந்த ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படம் ஜன-26ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
அதேசமயம் தனது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்-10 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ப்ரோ டாடி காமெடி படமாகவும் ஆராட்டு ஆக்சன் படமாகவும் உருவாகியுள்ளது.