அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி இன்று(டிச., 29) காலமானார். 58 வயதான இவர் புற்று நோயால் பாதிக்காப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும் அதிதி, நர்மதா என்கிற இரு மகள்களும், கேசவன் என்கிற மகனும் உள்ளனர்.
இவர் மலையாள சினிமாவின் பிரபல முன்னணி பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான கைத்தபுரம் தாமோதரன் நம்பூதிரியின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்தில் 1997ல் ஜெயராஜ் இயக்கிய தேசிய விருது படமான களியாட்டம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி, கண்ணகி, திலகம், ஒர்ம மாத்திரம் என கிட்டத்தட்ட 23 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.