சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுரசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டுல் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு. மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் தனது வீட்டின் அருகில் உள்ள கேபிஆர் பூங்காவில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவ்வாறு சென்றபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர் அவரிடம் இருந்த செல்போன், நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். அவரிடம் நகைகள் எதுவும் இல்லை. பணம் மற்றும் செல்போன் தர மறுத்துள்ளார். இதனால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு செல்போனையும், பணத்தையும் பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்த ஷாலு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.