பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுரசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டுல் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு. மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் தனது வீட்டின் அருகில் உள்ள கேபிஆர் பூங்காவில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவ்வாறு சென்றபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர் அவரிடம் இருந்த செல்போன், நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். அவரிடம் நகைகள் எதுவும் இல்லை. பணம் மற்றும் செல்போன் தர மறுத்துள்ளார். இதனால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு செல்போனையும், பணத்தையும் பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்த ஷாலு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.