2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுரசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டுல் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு. மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் தனது வீட்டின் அருகில் உள்ள கேபிஆர் பூங்காவில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவ்வாறு சென்றபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர் அவரிடம் இருந்த செல்போன், நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். அவரிடம் நகைகள் எதுவும் இல்லை. பணம் மற்றும் செல்போன் தர மறுத்துள்ளார். இதனால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு செல்போனையும், பணத்தையும் பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்த ஷாலு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.