நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு | தமிழ் நடிகையை சித்ரவதை செய்த கணவர்: பரபரப்பு புகார் | விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி |
துல்கர் சல்மான் நடித்து நேற்று வெளியான படம் குரூப். இந்திரஜித் சுகுமாறன், ஷோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். துல்கர் சல்மானே தயாரித்துள்ளார். இந்த படம் கேரளா போலீஸ் மற்றும் சர்வதே போலீஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றால் 1984ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படம் முடிந்த பிறகு சுகுமார குரூப்பின் குடும்பத்திற்கு போட்டுக்காட்டி அவர்களின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் சுகுமார குரூப்பின் தனியுரிமையை பாதிக்கிறது, அவரது குடும்பத்தினர் இந்த படத்தை விரும்பவில்லை எனவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கொச்சியை சேர்ந்த செபின் தாமஸ் என்பவர் கேரள உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது, என்றாலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை மற்றும் இண்டர்போலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.