புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் சமீபத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதன் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. அதேசமயம் இந்தப்படத்தின் ஒரிஜினலான ஹிந்தியில் கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தான் நழுவ விட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தற்போது கூறியுள்ளார்.
ஹிந்தியில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துவிட்ட துல்கர் சல்மானுக்கு அந்தாதுன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்த சமயத்தில் சரியான தகவல் தொடர்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படாததால் அந்த வாய்ப்பு தன்னிடம் இருந்து கைநழுவிப் போனது என தற்போது ஒரு பேட்டியில் துல்கர் சல்மான் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியாகி உள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியபோதுதான் துல்கர் சல்மான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.




