நாயகன் - சுதீப் கிஷான்
நாயகி - நித்யா மேனன்
இயக்குனர் - ராஜசிம்ஹா
நாயகன் சுதீப் கிருஷ்ணா தான் சிறு வயதில் நேசித்த பெண்ணான நித்யா மேன்னை தேடி அழைகிறான். ஒரு சுபயோக சுப தினத்தில், ஒரு பெரு நகரின் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கே வைத்து நாயகி நித்யா மேனனை நாயகன் சுதீப் பார்க்கிறான். அவள் தான் சிறு வயதில் நேசித்த பெண் என்பதை அறியாமல் அவளிடம் விளையாட்டு காட்டுகிறான்.
இந்த குழப்பத்திற்கு மத்தியில், அவனக்கு ஒரு செல்போன் அழைப்பு வருகிறது. மறு முனையில் பேசுவது (ரவி கிஷான்) பெரும் ரவுடி என்றும் சொல்லலாம். இந்த போக்குவரத்து நெரிசலுக்கும் அவன் தான் காரணம். சுதீப்பிடம், அந்த மேம்பாலத்தில் அவன் வைத்திருக்கும் வெடிகுண்டை வெடிக்க வைக்கும் படி சொல்கிறான். இல்லை என்றால் நித்தியா மேன்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறான். சுதீப் என்ன செய்தான்? வெடி குண்டை வெடிக்க வைத்தானா? மேம்பாலத்தில் இருந்த மக்கள் என்ன ஆனார்கள்.
படத்தின் கதை சுவாரஸ்யமானது தான், சுதீப் தான் மொத்த படத்திலும் முக்கியமான ஆள். படத்தின் முதல் காட்சியில் இருந்து கவனம் ஈர்க்கிறார். முக்கியமாக கிளைமேக்ஸ் காட்சிகளில் சுதீப்-யின் நடிப்பு அருமை.படத்தின் இறுதி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக செல்கிறது. ரவி கிஷானும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிரார். இவ்வளவு சுவாரஸ்யமான கதை இருந்தும், படத்தின் முன் பாதியில் முக்கால்வாசி கதி அற்று சுழல்கிறது. படம் பரபரப்பாக ஆரம்பிபது என்னவோ இடைவேளையில் தான் அதன் பின் திரைக்கதை சீரான வேகத்தில் செல்கிறது.
முதல் பாதி திரைக்கதையில் சற்றே கவனம் வைத்திருந்தால், படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். காமெடி காட்சிகள் என நினைத்து வைத்த காட்சிகள் அளுப்பை ஏற்படுத்துகிறது..ரசிக்கும்படி காட்சிகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாரட்டியாக வேண்டும், அரங்கம் அமைத்து தான் காட்சி படுத்தினார்கள் என்றாலும் நன்றாக இருக்கிறது. இயக்குனர் ராஜசிம்ஹா எடுத்துக்கொண்ட சுவாரஸ்யமான கதையை அழகாகவே படமாக்கியிருக்கிரார். சில வழக்காமான காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்த படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
ஒக்க அம்மாயி தப்பா - ஒரு முறை பார்க்கலாம்