விமர்சனம்
அ நிறம் | அளவு
கதை சரத்குமார். அதற்கு க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதையில் விறுவிறுப்பேற்றி படத்தை படுவேகமாகச் செல்ல உதவியுள்ளார்.
பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு அம்மாவோடு சென்று தனியார் பள்ளி தாளாளரிடம் கெஞ்சுகிறார். தாளாளர் கோபத்தில் தாயைத் தள்ளிவிட அவர் தலையில் அடிபட்டுச் சாகிறார். அன்றுமுதல் பணம் பணம் என்று ஊரே நடுங்கும் சர்வேஸ்வரனாக உருவாகிறார் ஒரு சரத்குமார். அவரைப் பிடிக்க வந்த இன்னொரு சரத்தின் நண்பன் சமுத்திரகனியை நாடகமாடிக் கொல்கிறார். இதற்குப் பழிவாங்க தனிப்படை அமைத்துப் போட்டுத் தள்ளுகிறார் நல்ல சரத்குமார்.
போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் வரும் சமுத்திரகனி கதாபாத்திரம் சபாஷ் போட வைக்கிறது. காதலியாக வரும் மீரா நந்தன் மனதை அள்ளுகிறார். ஸ்பெஷல் போலீஸ் ஆபீஸராக வரும் ஓவியா சரத்துடன் ஆடிப்பாடி குண்டுக்குப் பலியாகி மனத்தில் நிற்கிறார்.
ஓவியாவை இமான் அண்ணாச்சியிடம் அறிமுகப்படுத்தி சர்வேஸ்வரன் வீட்டுக்குள் நுழைவது, மீரா நந்தனிடம் காதலில் கலக்குவது என நல்ல சரத்குமார் வழக்கமான நாயகன்தான். ஆனால் ஸ்வீட் வில்லனாக வரும் சர்வேஸ்வரன் கேரக்டரில் சரத்குமார் முத்திரை பதித்திருக்கிறார்.
தம்பி ராமையா, இமாம் அண்ணாச்சி, வெண்ணிற ஆடை மூர்த்தி வரும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கானா உலகநாதன் சர்வேஸ்வரன் துதி பாடியபடியே அவருக்கு ஜால்ரா போடுவது ரசிக்கலாம்.
நளினி, டெல்லி கணேஷ், மோகன்ராம், சந்தான பாரதி, ஆதவன், வின்சென்ட் அசோகன் என ஒரு பெரிய கேரக்டர் பட்டாளமே இருந்தாலும் யாரும் அதிக வேலையில்லை என்பது குறை.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் மென்மையைப் பேசுகிறது. பின்னணி இசையும் ஓகே.
கும்பகோணம் ஒரு சிறிய பகுதி. அங்கிருந்து இந்தியா முழுவதும் பாம்களை லாரி மூலம் கடத்தி இந்தியாவை நாசமாக்கும் சர்வேஸ்வரன்மீது உளவுதுறை பார்வை படாதது ஏன்? போலீஸ் அதிகாரியாக வரும் இன்னொரு சரத் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்பதை சரியாக விளக்காதது மைனஸ்கள்.
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் சலிப்பின்றி போகிறது. கமர்ஷியல் படத்துக்கு என்னென்ன தேவையோ அதை விறுவிறுப்பாகத் தந்துள்ளார் இயக்குநர் ஏ. வெங்கடேஷ். ஸ்டன்ட் சிவாவின் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கிறது.
பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு அம்மாவோடு சென்று தனியார் பள்ளி தாளாளரிடம் கெஞ்சுகிறார். தாளாளர் கோபத்தில் தாயைத் தள்ளிவிட அவர் தலையில் அடிபட்டுச் சாகிறார். அன்றுமுதல் பணம் பணம் என்று ஊரே நடுங்கும் சர்வேஸ்வரனாக உருவாகிறார் ஒரு சரத்குமார். அவரைப் பிடிக்க வந்த இன்னொரு சரத்தின் நண்பன் சமுத்திரகனியை நாடகமாடிக் கொல்கிறார். இதற்குப் பழிவாங்க தனிப்படை அமைத்துப் போட்டுத் தள்ளுகிறார் நல்ல சரத்குமார்.
போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் வரும் சமுத்திரகனி கதாபாத்திரம் சபாஷ் போட வைக்கிறது. காதலியாக வரும் மீரா நந்தன் மனதை அள்ளுகிறார். ஸ்பெஷல் போலீஸ் ஆபீஸராக வரும் ஓவியா சரத்துடன் ஆடிப்பாடி குண்டுக்குப் பலியாகி மனத்தில் நிற்கிறார்.
ஓவியாவை இமான் அண்ணாச்சியிடம் அறிமுகப்படுத்தி சர்வேஸ்வரன் வீட்டுக்குள் நுழைவது, மீரா நந்தனிடம் காதலில் கலக்குவது என நல்ல சரத்குமார் வழக்கமான நாயகன்தான். ஆனால் ஸ்வீட் வில்லனாக வரும் சர்வேஸ்வரன் கேரக்டரில் சரத்குமார் முத்திரை பதித்திருக்கிறார்.
தம்பி ராமையா, இமாம் அண்ணாச்சி, வெண்ணிற ஆடை மூர்த்தி வரும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கானா உலகநாதன் சர்வேஸ்வரன் துதி பாடியபடியே அவருக்கு ஜால்ரா போடுவது ரசிக்கலாம்.
நளினி, டெல்லி கணேஷ், மோகன்ராம், சந்தான பாரதி, ஆதவன், வின்சென்ட் அசோகன் என ஒரு பெரிய கேரக்டர் பட்டாளமே இருந்தாலும் யாரும் அதிக வேலையில்லை என்பது குறை.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் மென்மையைப் பேசுகிறது. பின்னணி இசையும் ஓகே.
கும்பகோணம் ஒரு சிறிய பகுதி. அங்கிருந்து இந்தியா முழுவதும் பாம்களை லாரி மூலம் கடத்தி இந்தியாவை நாசமாக்கும் சர்வேஸ்வரன்மீது உளவுதுறை பார்வை படாதது ஏன்? போலீஸ் அதிகாரியாக வரும் இன்னொரு சரத் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்பதை சரியாக விளக்காதது மைனஸ்கள்.
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் சலிப்பின்றி போகிறது. கமர்ஷியல் படத்துக்கு என்னென்ன தேவையோ அதை விறுவிறுப்பாகத் தந்துள்ளார் இயக்குநர் ஏ. வெங்கடேஷ். ஸ்டன்ட் சிவாவின் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கிறது.
சண்டமாருதம் - கமர்ஷியல் புயல்!
Advertisement
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!