போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வதும் ஓரிரு வருடங்களில் அல்லது பத்து இருபது வருடங்கள் கழித்தும் கூட தங்களுக்குள் விவாகரத்து செய்துகொண்டு பிரிவதும் சகஜமாக நடக்கும் ஒன்றுதான். அந்த வகையில்தான் பாலிவுட் நடிகர் ஆமிர்கான், ஏற்கனவே தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
15 வருடங்கள் இவர்களது திருமண வாழ்க்கை கடந்த நிலையில், அதற்கு அடையாளமாக ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் சமீபத்தில் தாங்கள் இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டதாகவும் ஆமீர் கானும் கிரண் ராவும் அறிவித்தனர். அதேசமயம் நாங்கள் நண்பர்களாக பழகுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தங்களது மகனுக்கு நல்ல பெற்றோராக இருப்போம் என்றும் கூறினர். அதை நிரூபிப்பது போல ஆமீர்கான் நடித்து வரும் லால் சிங் சத்தா படப்பிடிப்பு லடாக்கில் நடந்தபோது அவருக்கு உதவியாக கிரண் ராவும் உடன் சென்றிருந்தார். படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அந்த சமயத்தில் வைரலாக பரவின.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தவர்கள் போலவே அல்லாமல், தனது நண்பர் ஒருவரின் வீட்டு திருமணத்திற்கு கிரண் ராவுடன் ஜோடியாக சென்று கலந்து கொண்டுள்ளார் ஆமீர் கான். ஒருவேளை மௌன ராகம் படத்தில் வருவதுபோல பிரிந்து வாழும்போதே நண்பர்களாக பழகினால் மீண்டும் தங்களுக்குள் சேர்ந்து வாழும் அளவுக்கு புரிதல் ஏற்படும் என நினைக்கிறார்களோ என்னவோ.