மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஷாருக்கான் சினிமாவில் நடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2018ல் வெளிவந்த ஜீரோ படத்தில் நடித்தார். அந்த படத்தின் தோல்வியில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்திருக்கிறார். வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் மற்றும் அட்லீ இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்கு பிறகு பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் ஹிராயினியுடன் இணைகிறார். 3 இடியட்ஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ், பிகே உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இந்த படம் இந்தியாவில் இருந்து கிளம்பி வெளிநாட்டில் சட்டவிரோதமாக குடியேறும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசப்போகிறது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்திலிருந்து பல்வேறு இளைஞர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேற முனைகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகச் செல்ல முடியாத இவர்கள், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாடுகளில் குடியேறுகின்றனர். இதுபற்றிய படமாக உருவாகிறது.
கனடாவுக்குச் செல்ல விரும்பும் ஒரு பஞ்சாபி இளைஞனின் கதையுடன் இந்த பிரச்சினையை பேச இருக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. அந்த இளைஞனாக ஷாருக்கான் நடிக்கிறார்.