காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழில் கடந்த நான்கு வருடங்களாகத்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ஹிந்தியில் 14 சீசன்கள் முடிந்துவிட்டது. இந்த வருடத்திற்கான 15வது சீசன் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
கடந்த 11 சீசன்களாக சல்மான்கான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறது. கடைசியாக ஒளிபரப்பான 14வது சீசனில் சல்மான்கான் ஒரு வாரத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கினாராம். ஆனால், வர உள்ள 15வது சீசனில் ஒரு வாரத்திற்கு 25 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் சல்மான்கான் கேட்ட தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்க சம்மதித்துவிட்டதாம். மொத்தம் 14 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் மட்டும் சல்மான் மொத்தமாக 350 கோடி வரை சம்பாதித்து விடுவார்.
ஒரு படத்தில் 100 நாட்கள் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை விட 14 நாட்களில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் மூன்று மடங்கு சம்பளம் அதிகம் வரும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் பிரபலங்களின் டாப் 5 பட்டியலில் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.