சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
பாலிவுட் நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் சிறிது காலத்திற்கு படங்களில் நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறார் என்றொரு தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தற்போது அதுகுறித்து முழு தகவலும் தெரிய வந்துள்ளது.
அபிஷேக் பச்சன் நடிப்பில் தற்போது 'தேஸ்வி' என்கிற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு தற்போது மேஜர் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது.
இதையடுத்து அபிஷேக் பச்சனை சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.