டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தொடர்ந்து விஜய்யை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்குவது என்பதே ஒரு சாதனை தான். பல சர்ச்சைகளுக்கு இடையே அதை சாதித்த இயக்குனர் அட்லீக்கு அடுத்ததாக கோலிவுட்டில் ஹீரோக்கள் கிடைக்கவில்லையா, அல்லது பாலிவுட் லெவலுக்கு உயர பறக்கவேண்டும் என ஆசைப்பட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஆக.,15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள் என்கிற தகவலும் கசிந்துள்ளது. இது தொடர்பாக அட்லீ ஷாருக்கானை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது, அதை உறுதிப்படுத்துவது போல அட்லீ அவரது மனைவி பிரியா இருவரும் ஷாருக்கானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.