வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தொடர்ந்து விஜய்யை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்குவது என்பதே ஒரு சாதனை தான். பல சர்ச்சைகளுக்கு இடையே அதை சாதித்த இயக்குனர் அட்லீக்கு அடுத்ததாக கோலிவுட்டில் ஹீரோக்கள் கிடைக்கவில்லையா, அல்லது பாலிவுட் லெவலுக்கு உயர பறக்கவேண்டும் என ஆசைப்பட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஆக.,15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள் என்கிற தகவலும் கசிந்துள்ளது. இது தொடர்பாக அட்லீ ஷாருக்கானை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது, அதை உறுதிப்படுத்துவது போல அட்லீ அவரது மனைவி பிரியா இருவரும் ஷாருக்கானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.