இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் ஹிந்தி சினிமாவில் முடிசூடா மன்னராக திகழ்ந்தார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவார் பகுதியில் 1922ம் ஆண்டு பிறந்த முகம்மது யூசுப் கான் தான் சினிமாவில் திலீப் குமார் என்கிற பெயரில் பிரபலமானார். ஹிந்தி சினிமாவின் இப்போதைய முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கானுக்கெல்லாம் முன்பே பாலிவுட்டின் முதல் கான் நடிகர் என்கிற பெருமைக்குரியவராக திலீப் குமார் திகழ்ந்தார். அண்டாஸ், ஆன், தேவதாஸ், கங்கா ஜமுனா, ராம் அவுர் ஷியாம் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளவர், கடைசியாக 1998ம் ஆண்டு கில்லா எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.