பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
தலைவி படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அடுத்து மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையில் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி, நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். 2019ல் மணிகர்னிகா என்ற படத்தை இயக்கி, நடித்தார் கங்கனா. இந்தநிலையில் தற்போது மணிகர்னிகா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் அவர் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கஜினி முகமதுவை எதிர்த்து போட்டியிட்ட காஷ்மீர் மகாராணி குயின் டிட்டா வேடத்தில் கங்கனா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கஜினி முகமதுவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பதால் அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக குயின் டிட்டாவின் வேடத்தில் நடிக்கப்போகிறாராம் கங்கனா.
ஆனால் இந்த நேரத்தில் ஆசிஷ் கெளல் என்ற கதாசிரியர், காஷ்மீர் மகாராணி டிட்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் எழுதிய தி வாரியர் குயின் ஆப் காஷ்மீர் என்ற புத்தகத்தை தழுவி தனது படத்திற்கான கதையை கங்கனா எழுதியிருப்பதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதையடுத்து கங்கனா சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், இன்னும் நாங்கள் அந்த படத்தையே ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. அதோடு சரித்திர கதைகளை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தன்மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் கேட்டுள்ளார் கங்கனா.