ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியாவின் பெரைய பாரத் என்று மாற்றுங்கள் என்று நடிகை கங்கனா ரணவத் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா என்ற பெயர் அடிமைப் பெயர் போல் இருக்கிறது. உடனே அதை மாற்றி, நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை வைக்க வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய நாடுகளின் மலிவான நகல் போன்று இல்லாமல், வேதங்கள் மற்றும் பகவத் கீதை, யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால், உலகின் மிகப்பெரிய நாடாக நாம் வெளிப்படுவோம். எனவே தான் அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற சொல்கிறேன்.
இந்தியா என்ற அடிமைப் பெயரை பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு கொடுத்தார்கள். அதாவது, சிந்து நதியின் கிழக்குப் பகுதியை குறிக்கும் வகையில் இது கொடுக்கப்பட்டது. நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிகுந்தவர்களாகவும் இருந்தோம். எனவே, பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.