பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மிஷன் மஜ்னு, குட்பை ஆகிய படங்கள் மூலம் ஹிந்தி சினிமாவில் காலூன்றியிருக்கும் ராஷ்மிகா மந்தனா, இன்னொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று நினைக்கும் ராஷ்மிகா தற்போது ஒரு ஆசிரியரை நியமித்து ஹிந்தி பயின்று வருகிறார். அடுத்து தான் நடிக்கப்போகும் புதிய ஹிந்தி படத்தில் தனக்குத்தானே டப்பிங் பேச வேண்டும் என்கிற நோக்கத்தில் ஹிந்தி பயில்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
என்னதான் பாலிவுட்டில் நடித்தாலும் மும்பையில் அவர் குடியேறப்போவதில்லையாம். எப்போதுமே எனது தலைமையிடம் ஐதராபாத் தான் என்று கூறும் ராஷ்மிகா, எத்தனை மொழிகளில் நடித்து பிரபலமானாலும் என்னை சினிமாவில் வளர்த்து ஆளாக்கிய தெலுங்கு சினிமாவை ஒருநாளும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, சர்வானந்துடன் ஆதவல்லு மீகுஜோஹர்லு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.