சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம் காமெடி கலந்த சமூக படமாக தயாராகிறது. இதில் ரகுல் ப்ரீத்தி சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார்.
இந்த கேரக்டரில் நடிக்க அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரையும் தான் முதலில் அணுகினார்கள். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். ரகுல் ப்ரீத்தி சிங் கதையையும், படத்தில் வரும் காட்சிகளையும் கேட்டுவிட்டு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இதுதவிர மே டே, தேங் காட், அட்டாக், டாக்டர்ஜி, சர்தார் கா கிராண்ட் சன் ஆகிய பாலிவுட் படங்களில் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார்.