ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, கொரோனா தொற்றின் முதல் அலை வீசும்போதே பல சமூக பணிகளை செய்தார். தற்போது இரண்டாம் அலை வீசும் நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் செய்யப்படுகிறது. இதனை அவர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்த செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் உருவாக்கும் மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் வந்து விட்டது. விரைவில் இந்த பணி முடிவடையும் என்று தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி தமிழில் ரஜினி ஜோடியாக காலா படத்தில் நடித்தார். தற்போது அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பெல்பாட்டம் என்ற படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்து முடித்திருக்கிறார்.