புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா |
திருமண வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதால் சினிமாவுக்கு சில மாதங்கள் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன், என்று நடிகை இஷா தியோல் கூறியுள்ளார். நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோலுக்கு, பரத் தக்தானி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ள இஷா தியோல், தனது கணவருடன் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக பெங்களூரூ வந்தார்கள். அப்போது இஷா தியோல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், இப்போது நான் எந்த புதிய பட வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்கிறது. திருமண வாழ்க்கையை நான் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். அதற்கு சில மாதங்கள் நான் ஓய்வாக இருக்க வேண்டும். நானாகத்தான் சினிமாவை விட்டு விலகியிருக்கிறேன். ஏதாவது நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், பார்க்கலாம். நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருக்கிறது, என்றார்.