'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் பாலிவுட் மீளவில்லை. இந்த நிலையில் அவரது நண்பரும் எம்.எஸ்.டோனி படத்தில் அவருடன் நடித்தவருமான சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானாவில் பிறந்த சந்தீப் நடிக்கும் ஆசையில் கடந்த 2009ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். 2016ம் ஆண்டு எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தார். தோனி படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ள தனது மனைவியின் டார்ச்சரே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து மும்பை ஜார்ஜியா பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.