ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் பாலிவுட் மீளவில்லை. இந்த நிலையில் அவரது நண்பரும் எம்.எஸ்.டோனி படத்தில் அவருடன் நடித்தவருமான சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானாவில் பிறந்த சந்தீப் நடிக்கும் ஆசையில் கடந்த 2009ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். 2016ம் ஆண்டு எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தார். தோனி படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ள தனது மனைவியின் டார்ச்சரே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து மும்பை ஜார்ஜியா பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.