ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அமீர்கான் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்த படம் 'தங்கல்'. இந்த படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். அந்த படத்திற்கு பின், அமீர்கானுடன் சேர்ந்து 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' என்ற படத்திலும் நடித்தார்.
'தக்ஸ் ஆப் இந்துஸ்தான்' படத்தில் அமீர்கானின் பரிந்துரையாலேயே, பாத்திமாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததாக நினைத்த நடிகை கேத்ரீனா கைப் கடுப்பாகி சண்டை போட்டதாக தகவல் பரவியது.
இதையடுத்து, பாத்திமா சனா ஷேக்கிற்கும், அமீர்கானுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த காதலால் ஆமீர்கானுக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூட செய்திகள் பரவின. ஆனால் அமீர்கான் இதுபற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.
அமீர்கானுடனான காதல் குறித்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் பாத்திமா சனா ஷேக் இப்படி குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது :
என்னையும், அமீர்கானையும் வைத்து கிளம்பியிருக்கும் வதந்தி மிகவும் வித்தியாசமானது. என் அம்மா ஒருநாள், என்னிடம், 'பத்திரிகையில் உன் படம் போட்டு செய்தி இருக்கிறது' என்று சொல்லி, அந்த செய்தியையும் எனக்குக் காட்டினார். என்ன எழுதியிருக்கின்றனர் என்பதையும் சொன்னார். நான் கலங்கினேன், இந்த வதந்தி குறித்து, நானே விளக்க வேண்டும் என நினைத்தேன்.
'யாராவது உங்களை ஏதாவது குற்றம்சாட்டினால், முதல் உள்ளுணர்வு வெளியே வந்து இதுபோன்று ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். நீங்கள் ஒரு கோபக்கார நபராக இருந்தால், நீங்கள் அவரை தாக்குவீர்கள். நீங்கள் அமைதியானவராக இருந்தால் நீங்களும் அதைப்பற்றி பேசுவீர்கள்' என என் அம்மா கூறினார். நான் இந்த வதந்தியால் பாதிக்கப்பட்டேன். அதனால் இனி, இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் விளக்கம் அளிக்கப் போவது இல்லை.
இவ்வாறு அந்த பேட்டியில் பாத்திமா கூறியுள்ளார்.