ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரபல பாலிவுட் பாடகர் மிகா சிங். இவர் மாடல் அழகி ஒருவருக்கு செல்போனில் ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக அபுதாபி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக கூறப்படுவதாவது:
பாடகர் மிகா சிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு அபுதாயில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றுக்கு சென்றுள்ளார். விழா முடிந்ததும் விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் அங்கு வந்திருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாடல் அழகி ஒருவரை சந்தித்தார். விருந்தில் சாதரணமாக பேசிய மிகா சிங், விருந்து முடிந்து சென்றதும். அந்த மாடல் அழகியின் போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
மிகா சிங்கோ, அல்லது கைது செய்த போலீசோ இதுவரை எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. எங்களுடன் தொடர்பு கொண்ட பிறகு அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி யோசிப்போம் என்று தூதரகம் பதிலளித்திருக்கிறது. இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.