அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் களம் இறங்குவது அதிகம் என்றால் பாலிவுட்டில் அப்படியே உல்டாவாக வாரிசு நடிகைகள் தான் அதிக அளவில் களம் இறக்கப்படுகின்றனர். அதில் லேட்டஸ்ட் வரவு தான் சாரா அலிகான். நட்சத்திர தம்பதியான சயிப் அலிகான், அம்ரிதா ஆகியோரின் மகள். இவர் நடித்துள்ள முதல் படமான 'கேதார்நாத்' வரும் டிச-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதையடுத்து ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்துள்ள 'சிம்பா' படம் வரும் டிச-28ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஒரே மாதத்தில் தனது இரண்டு படங்கள் வெளியாகவுள்ள இந்த இரட்டிப்பு சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு 'காபி டே' என்கிற பெயரில் விருந்துகொடுக்க தனது கைப்பட கடிதம் எழுதி அழைப்பு அனுப்பியுள்ளார் சாரா அலிகான்.