ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், பிரபல நடிகை தீபிகா படுகோனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். வரும் 14ல், அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் லோக்கோமா பகுதியில் உள்ள டெல் பெல்பி ஆனல்லோ என்ற பிரபல வில்லாவில் தான் திருமணம்.
இந்த வில்லா, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கலையம்சம் உள்ள கட்டடம். இங்கு திருமணம் முடித்து, இந்தியா திரும்பும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும், மும்பையிலும், பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் திருமணத்திற்கான நகைகளை தேர்வு செய்யும் பணியில் தீபிகா படுகோனின் பெற்றோரும்; உறவினரும் தீவிரமாக இருக்கின்றனர். அவர்களே, டிசைன் செய்து, அதை பொற்கொல்லர்களிடம் கொடுத்து, புதிது புதிதான டிசைன்களில், பிரத்யேகமாக நகைகளை செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. இப்படித் தயாராகும் நகைகளில் தாலி மற்றும் செயின் மட்டும் இருபது லட்ச ரூபாய் என்றும், இதர நகைகள் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தீபிகா படுகோன் திருமணத்துக்காக நகைகள் தயாராவதாகக் கூறப்படுகிறது.




