டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், பிரபல நடிகை தீபிகா படுகோனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். வரும் 14ல், அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் லோக்கோமா பகுதியில் உள்ள டெல் பெல்பி ஆனல்லோ என்ற பிரபல வில்லாவில் தான் திருமணம்.
இந்த வில்லா, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கலையம்சம் உள்ள கட்டடம். இங்கு திருமணம் முடித்து, இந்தியா திரும்பும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும், மும்பையிலும், பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் திருமணத்திற்கான நகைகளை தேர்வு செய்யும் பணியில் தீபிகா படுகோனின் பெற்றோரும்; உறவினரும் தீவிரமாக இருக்கின்றனர். அவர்களே, டிசைன் செய்து, அதை பொற்கொல்லர்களிடம் கொடுத்து, புதிது புதிதான டிசைன்களில், பிரத்யேகமாக நகைகளை செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. இப்படித் தயாராகும் நகைகளில் தாலி மற்றும் செயின் மட்டும் இருபது லட்ச ரூபாய் என்றும், இதர நகைகள் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தீபிகா படுகோன் திருமணத்துக்காக நகைகள் தயாராவதாகக் கூறப்படுகிறது.