'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், பிரபல நடிகை தீபிகா படுகோனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். வரும் 14ல், அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் லோக்கோமா பகுதியில் உள்ள டெல் பெல்பி ஆனல்லோ என்ற பிரபல வில்லாவில் தான் திருமணம்.
இந்த வில்லா, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கலையம்சம் உள்ள கட்டடம். இங்கு திருமணம் முடித்து, இந்தியா திரும்பும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும், மும்பையிலும், பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் திருமணத்திற்கான நகைகளை தேர்வு செய்யும் பணியில் தீபிகா படுகோனின் பெற்றோரும்; உறவினரும் தீவிரமாக இருக்கின்றனர். அவர்களே, டிசைன் செய்து, அதை பொற்கொல்லர்களிடம் கொடுத்து, புதிது புதிதான டிசைன்களில், பிரத்யேகமாக நகைகளை செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. இப்படித் தயாராகும் நகைகளில் தாலி மற்றும் செயின் மட்டும் இருபது லட்ச ரூபாய் என்றும், இதர நகைகள் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தீபிகா படுகோன் திருமணத்துக்காக நகைகள் தயாராவதாகக் கூறப்படுகிறது.