என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், பிரபல நடிகை தீபிகா படுகோனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். வரும் 14ல், அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் லோக்கோமா பகுதியில் உள்ள டெல் பெல்பி ஆனல்லோ என்ற பிரபல வில்லாவில் தான் திருமணம்.
இந்த வில்லா, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கலையம்சம் உள்ள கட்டடம். இங்கு திருமணம் முடித்து, இந்தியா திரும்பும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும், மும்பையிலும், பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் திருமணத்திற்கான நகைகளை தேர்வு செய்யும் பணியில் தீபிகா படுகோனின் பெற்றோரும்; உறவினரும் தீவிரமாக இருக்கின்றனர். அவர்களே, டிசைன் செய்து, அதை பொற்கொல்லர்களிடம் கொடுத்து, புதிது புதிதான டிசைன்களில், பிரத்யேகமாக நகைகளை செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. இப்படித் தயாராகும் நகைகளில் தாலி மற்றும் செயின் மட்டும் இருபது லட்ச ரூபாய் என்றும், இதர நகைகள் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தீபிகா படுகோன் திருமணத்துக்காக நகைகள் தயாராவதாகக் கூறப்படுகிறது.