சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

எப்.டி.ஐ.ஐ., எனப்படும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்தின் தலைவர் பொறுப்பை பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ராஜினாமா செய்தார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான நடிகர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி அளிக்கும், எப்.டி.ஐ.ஐ., தலைவராக, பிரபல பாலிவுட் நடிகர் அனுபவம் கெர், கடந்தாண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரதோருக்கு அனுபம் கெர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், கூறியுள்ளதாவது: சர்வதேச, டிவி நிகழ்ச்சிக்காக, அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதேபோன்று, தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில், மையத்தின் தலைவராக தொடர்வது, முறையானதல்ல. அது மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும், சிரமத்தை ஏற்படுத்தும். அதனால், இந்தப் பதவியில் இருந்து விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.