மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எப்.டி.ஐ.ஐ., எனப்படும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்தின் தலைவர் பொறுப்பை பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ராஜினாமா செய்தார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான நடிகர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி அளிக்கும், எப்.டி.ஐ.ஐ., தலைவராக, பிரபல பாலிவுட் நடிகர் அனுபவம் கெர், கடந்தாண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரதோருக்கு அனுபம் கெர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், கூறியுள்ளதாவது: சர்வதேச, டிவி நிகழ்ச்சிக்காக, அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதேபோன்று, தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில், மையத்தின் தலைவராக தொடர்வது, முறையானதல்ல. அது மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும், சிரமத்தை ஏற்படுத்தும். அதனால், இந்தப் பதவியில் இருந்து விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.