'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும். பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் உள்பட பல படங்களில் இணைந்து நடித்தனர். அத்தனை படங்களும் வெற்றி பெற்றது. இதனால் மேட் பார் ஈச் அதர் ஜோடிகளாக வலம் வந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக வந்த செய்திகளை இருவரும் மறுக்காமல் இருந்தனர். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதியாகி இருக்கிறது.
ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடக்கும் என்று தெரிகிறது. ரன்வீர் சிங், சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதராக உள்ளார். அதனால் தங்கள் நாட்டில் திருணம் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் சுவிட்சர்லாந்து கூறியிருக்கிறதாம்.
தீபிகாவுக்கு பிடித்த நாடு இத்தாலி. அரசு விருந்தினராக பலமுறை அங்கு சென்றுள்ளார். இத்தாலி நாடும் தங்கள் நாட்டில் திருமணம் செய்து கொள்ள வருமாறு அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணம் இத்தாலியில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.