ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டி ருப்பவர் ஆலியாபட். பிரபல பாலிவுட் பட இயக்குனர் மகேஷ்பட்டின் மகளான இவரும் தற்போது நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை குறித்து ஒரு ஆவேச கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்து ஆலியாபட் கூறும்போது, சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகள் போராடுகிறார்கள். அதை பயன்படுத்தி சில பிரபலங்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்கு இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டும்.
அதாவது, யாராவது சினிமா பிரபலங்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைத்தால் அதுகுறித்து உடனே தங்களது பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பின்னர் போலீசில் புகார் அளிக்க வேண்டும். இப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நடிகைகளும் தைரியமாக அதை எதிர்கொள்ளும் போதுதான் சினிமா உலகில் தொடர்கதையாகி வரும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறியுள்ளார் ஆலியாபட்.
வாரிசு நடிகையான ஆலியாபட்டின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.