இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
மலையாளத்திற்கு சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என றெக்கை கட்டாத குறையாக பறந்து கொண்டிருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். பாலிவுட்டில் தனது முதல் என்ட்ரியான 'கர்வான்' படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார் துல்கர்.
அபிஷேக் சர்மா என்பவர் இயக்கத்தில் 'தி சோயா பேக்டர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் துல்கர். தாநாயகியாக 'ராஞ்சனா' புகழ் சோனம் கபூர் நடிக்கிறார்.
கிரிக்கெட் பின்னணியில் அனுஜா சௌகான் என்பவர் 2008ல் எழுதிய 'தி சோயா பேக்டர்' என்கிற நாவலை தழுவி இந்தப்படம் உருவாக இருக்கிறது. இதில் கிரிக்கெட் கேப்டனாக துல்கர் சல்மான் நடிக்கிறாராம். இதற்காக இயல்பான கிரிக்கெட் வீரராக திரையில் தெரிய வேண்டும் என்பதால் ஒரு கிரிக்கெட் வீரருக்கான பயிற்சிகளையும் ஆட்ட முறைகளையும் கற்றுக்கொள்ள இருக்கிறார் துல்கர் சல்மான்.